பிரதமர் மோடி ஒரு திருடன் என்று மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா பதிவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் முன்னணி நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார்.இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2014ல் தோல்வியடைந்தார். தற்போது ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
unknown nodeரம்யா தன்னுடைய ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன் என எழுதிக்கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். இதனால் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையீது ரிஸ்வான் அளித்த புகாரின் பேரில் அம்மாநில போலீசார் ரம்யா மீது சட்டப்பிரிவு 67, சட்டப்பிரிவு 124-ஏவின் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.
unknown nodeஇந்நிலையில் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா பதிவிட்டுள்ளார்.அதில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அந்த ட்வீட்டை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்? அடுத்த முறை வேண்டுமானால் மேலும் ஒரு ட்வீட்டை பதிவிடுகிறேன்.அதாவது இந்தியாவில் தேசதுரோக வழக்கு ரத்து செய்ய வேண்டும். இது மிகவும் மோசமானது. என் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தவர்களுக்காக இதை மீண்டும் சொல்கிறேன்.பிரதமர் மோடி ஒரு திருடன்(#PMChorHai).
unknown node