தடம் மாறும் ரயில்வே துறை ..! கட்டணம் உயரும் அபாயம்

Default Image
  • பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
  • இந்திய ரயில்வே நிறுவனம்  தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில் ரயில்வே துறையின் நோக்கம் என்ன என்பது குறித்து பார்ப்போம்..

உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம்  தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் தனியாரின் பங்களிப்பு உள்ளது போல ரயில்வே துறையிலும் தனியாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வரும் ரயில்கள் இனி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.

இதன் முதல் கட்டமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களையும் மற்றும் மலை வழித்தடங்களில் ஓடும் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர். குறிப்பாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி,ஜோத்பூர், மும்பை உள்ளிட்ட  இடங்களில் 11 தனியார் ரயில்கள் தமிழகத்தின் இயக்கப்படவுள்ளது.இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரயில்வே தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதால் முதல் கட்டமாக குறைவாக இருக்கும் பயணக் கட்டணமானது அதிகப்படியாக உயர்த்தும் அபாயம் ஏற்படும்.எனவே இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT