நாளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை…!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை.
சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.