புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு ...!

புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.

புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.

கடந்த நவம்பர் 20  ஆம் தேதி  கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

unknown node

புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி  திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.

இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் செல்ல முடியாததால் திருச்சிக்கு திரும்பினேன். திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

unknown node

இந்நிலையில்  புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை (நவம்பர்  28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.இன்று  இரவு ரயில் மூலம் முதலமைச்சர் பழனிசாமி  நாகை செல்கிறார்.