தமிழகத்தில் புதிய தளர்வுகளின்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் உத்தரவு!

Default Image

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீடித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா தொற்றியின் பரவல் குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், புதிய தளர்வுகள் இன்றி தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, இருந்த தளர்வுகளுடன், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளை சரியான முறையில் பின்பற்றவிலை என்றால் அதன் விளைவிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஊரடங்கில் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, தியேட்டர்கள், மதுக்கூடங்களை திறக்க தடை தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்