தீபாவளி கொண்டாட்டம் : நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

தீபாவளி வருவதை முன்னிட்டு நாளை அரை நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school leave

சென்னை : வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

எனவே, தீபாவளியை முன்னிட்டு நாளையிலிருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. மேலும்,  நாளை அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இன்பமான செய்தியாக மாறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai