admk - dmdk alliance [image source:x/@thatsTamil]
DMDK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொடர் இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக, அதிமுக என இரண்டு தரப்பிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, இறுதியாக அதிமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்துள்ளது. முதல் முறையாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினர்.
அப்போது, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்படி, திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக. இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து புரட்சி செய்த அதிமுக அலுவலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி.
அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி, ராசியான கூட்டணி மற்றும் வெற்றிக் கூட்டணி. 2011-ல் அதிமுக, தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. இதனால், 2011 வரலாறு மீண்டும் திரும்பும். எனவே, அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள் பல்வேறு சவால்களை கடந்து மாபெரும் வெற்றி பெரும் என கூறினார். மேலும், அதிமுக – தேமுதிக கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடரும் எனவும் தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…