“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

தனது பேச்சு மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தி இருக்கும் எனக் கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DMK General Secretary Durai Murugan ,

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கு பொருள்படும் பழைய பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதனை அடுத்து தனது பேச்சின் தாக்கம் உணர்ந்த அமைச்சர் துரைமுருகன், தனது பேச்சு கருத்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். எனது பேச்சின் தன்மை அறிந்து நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், ” இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் (கருணாநிதி) அவர்கள் கருணை உள்ளத்தோடு “மாற்றுத் திறனாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் தளபதி (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.” என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்