மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் இணைக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயரும் மு.க.அழகிரியின் ஆதரவாளருமான பி.எம்.மன்னன் தெரிவித்துள்ளார் .
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
unknown nodeதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்தார்.
unknown nodeஇந்நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர் பி.எம்.மன்னன் மதுரையில் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மு.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை திமுக மீண்டும் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது .அது மட்டும் இல்லாமல் அழகிரி மற்றும் ஆதரவாளர்களை மீண்டும் திமுகவில் இணைக்க வேண்டும்.அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம். என்றும் மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயரும் மு.க.அழகிரியின் ஆதரவாளருமான பி.எம்.மன்னன் தெரிவித்துள்ளார் .