ஹெச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது...!பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக கதவை தட்டவும் இல்லை, திறக்கவும் இல்லை...!தம்பிதுரை

அதிமுக தனித்து நின்று வெல்லும் வலிமையுடன் உள்ளது என்று  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக தனித்து நின்று வெல்லும் வலிமையுடன் உள்ளது என்று  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.

இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

unknown node

இந்நிலையில் ஹெச்.ராஜா குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஹெச்.ராஜாவின் பேச்சு ஏற்புடையதல்ல, கண்டிக்கத்தக்கது.பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக கதவை தட்டவும் இல்லை, திறக்கவும் இல்லை.அதேபோல் அதிமுக தனித்து நின்று வெல்லும் வலிமையுடன் உள்ளது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை என்று  தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.