கனமழையால் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Holidays have been declared for private and government schools in Karaikal district due to continuous heavy rains.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது .அந்த நிலையில் சமீபத்தில் இந்த புரேவி புயலால் பெய்த மழை காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு 2,3,4 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது . இந்த நிலையில் தொடர்ந்து இன்றும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவிட்டுள்ளார்