எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில்,எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான்.நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன். தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூரில் தீபாவளிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.அதேபோல் போக்குவரத்து தொழிலாளர்கள் தீபாவளி முன்பணம் ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது .தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.