என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், பேனர் கிழிப்பு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.அதேபோல் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை நீதிமன்றத்தில் சந்திப்பேன்.
மேலும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்துள்ளது. இருப்பினும், இத்திட்டத்திற்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிக்கிறது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்..