ஜல்லிக்கட்டு ஆர்வலர் என்ற நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் ட்வீட்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மண்ணில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகம் நடைபெற்றுள்ளது, அந்த காளைகள் நமது தமிழ் குடும்பங்களின் ஒரு அங்கமாக வளர்க்கப்படுகின்றன.
விளையாட்டின் உறுதியான ஆதரவாளராக, ஜல்லிக்கட்டுச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த வழக்கில் வழக்குத் தொடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். தமிழ் மக்களின் உறுதியையும், மனசாட்சியையும் ஆணித்தனமாக பிரதிபலிப்போம். ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம்! ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்! நாங்கள் அதை ஒருபோதும் கைவிட மாட்டோம்! என தெரிவித்துள்ளார்.
unknown node