ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில் உள்ளனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில் உள்ளனர்.எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் மாற்றத்தை கொண்டுவர தயாராகி வருகின்றனர்.நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 18பேரும் என்ன தவறு செய்தார்கள் என ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.