கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy interviewed that we will urge the Central Government to provide the relief amount demanded by the government.

அரசு கோரும் நிவாரண தொகையை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாத காரணத்தால் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பே அனைத்து நீர்நிலைகளை தூர்வாரபட வேண்டும். கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. சேதங்கள் குறித்து மாநில அரசு உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.

மாநில அரசு கோரும் நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சார்பாகவும், அதிமுக சார்பாகவும் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.