சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று,சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் […]
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டிப்பு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 27-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை […]
தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடிக்க அரசின் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததையடுத்து,தமிழகத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசால் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு,கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள அரசின் தொழில்நுட்ப வல்லுநர் […]
போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில்,மத்திய […]
அரசு கல்லூரி,பல்கலை.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும்,மன உளைச்சலுக்கும் ஆளாகும் கல்லூரி ஆசிரியர்கள்,விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனவும்,இவற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக […]
கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. […]
ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் கிராமசபை […]
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவு. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டகாலம், பனிக்காலமாக முறைப்படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019 […]
கொரோனா பரவல் காரணமாக வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என சங்கர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி மனுதாக்கல் செய்த […]
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு […]
தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர். தமிழகத்தை ஆளுகின்ற […]
தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தை எரித்து சேதப்படுத்திய 2 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் (44), த/பெ. என்பவர் தாளமுத்துநகரில் உள்ள தனது நண்பர் மாரியப்பன் என்பவரின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க நேற்று (23.01.2022) சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து (32) என்பவர் குடிபோதையில் சரவணனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மாரிமுத்துக்கு ஆதரவாக அவரது நண்பரான தங்கராஜ் (29), என்பவரும் சரவணனுடன் தகராறு செய்து, தாளமுத்து […]
கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த […]
சென்னை:தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள்,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச் சான்றிதழ்கள் பெற்றததற்காக,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி,தரச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவற்றில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம் – அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,சமயபுரம் […]
அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கைது. கோவை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், உள்ளே புகுந்து சுவற்றில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டியுள்ளனர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு என்றும் வேண்டுமானால் அனுமதி […]
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டம் ஒரு மாபெரும் புரட்சி ஆகும். அந்த வகையில், மொழிப்போர் தியாகிகள் தினமான ஜன-25-ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இதனையடுத்து, மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு […]
ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. B.E, B.Tech, மற்றும் B.Arch மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற […]
திருச்சி:உறையூரில் தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது. திருச்சி மாவட்டம்,உறையூரை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நிசா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,5 வது குழந்தையான தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாச நல்லூரை […]