குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் மக்களுக்கு அனுமதி!

The public and tourists are allowed to bathe in Courtallam, Tenkasi district from today.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய பகுதிகளில் 8 மாதங்களுக்கு பின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.