தமிழ்நாடு :நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில் திரும்புகையில், கதவு அருகே நின்றிருந்த பெண் தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயமடைந்த சாரதா, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளிவந்துள்ளது, இந்த சம்பவத்தின் தொடர்பான ஒரு வீடியோ, சாரதா என அடையாளம் காணப்பட்ட பெண், பேருந்தில் இருந்து விழுந்து சாலையில் உருண்டு விழுந்ததைக் காட்டியது.
தனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் கண்டக்டரை எச்சரித்துதும், அப்போது பேருந்து நின்ற இடத்தில இருந்து சுமார் 20 அடி தூரத்தில் தவறி விழுந்த சாரதாவுக்கு உதவ பயணிகள் விரைந்தனர்.
unknown nodeகடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தின் ஈரோட்டில் நடந்துள்ளது. அது ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒரு பெண்ணை பேருந்து நடத்துனர் காப்பாற்றினார். அந்தச் சம்பவம் தொடர்பான வைரல் வீடியோவில், கண்டக்டர் அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து பேருந்திற்குள் இழுப்பதைக் காட்டியது.
unknown node