இலவச திட்டங்களால் தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சி உயர்ந்துள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில்,இலவச திட்டங்களால் தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சி உயர்ந்துள்ளது. ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்கு இலவச அரிசி வேண்டாம் என சொல்வதை எப்படி ஏற்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் எது வேண்டும், எது வேண்டாம் என்பதை பாமர மக்கள்தான் சொல்ல வேண்டும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.