மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி கூறுகையில், மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை.அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் .மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை.இது தவறான தகவல் ஆகும் .மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து தவறான தகவலைத் அளித்துள்ளார் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.