உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.பேட்ட & விஸ்வாசம்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் முதற்கட்டமாக 50,000 அபராதம், 2-வது கட்டமாக 1 லட்சம் அபராதமும், 3-வதாக திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும்.பொங்கலுக்கு திரையரங்குகளில் கட்டண விவரம் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.