கூவத்தூரில் ஒரு ரகசியம் இல்லை, பல ரகசியங்கள் உள்ளதை விரைவில் தெரிவிப்பேன் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், முதல்வர் மற்றும் காவல்துறைக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது ஏற்க்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து,அவர் கைது செய்யப்பட்டார்,பின் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார்.
unknown nodeஇந்நிலையில் கருணாஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கூவத்தூரில் ஒரு ரகசியம் இல்லை, பல ரகசியங்கள் உள்ளதை விரைவில் தெரிவிப்பேன். தினகரன் அணி மேல்முறையீடு செய்தாலும் சரி, தேர்தலை சந்தித்தாலும் சரி எனக்கு சம்மதம் .சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.