தவெக கொடி விவகாரம்: “BSP யானையும் TVK யானையும் ஒன்றில்லை” – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்.!

தவெக் கொடி விவகாரத்தில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் ஆனந்த் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

tvk BSP

சென்னை : தவெக கொடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தவெககொடியின் யானை சின்னத்திற்கு தடை கோரி சென்னை பெருநகர சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 4) தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், TVK கொடிக்கும், BSP கொடிக்கும் எந்தவித ஒற்றுமையும் இல்லை. BSP கொடியில் இருப்பது ஒற்றை யானை, TVK கொடியில் இருப்பது இரட்டை யானை. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.

இதனால், வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் குழப்பம் ஏற்படாது என்பதால், BSP மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல என்றும் தமிழகத்தின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்