பிரதமர் மோடிக்கு ‘செல்லப் பெயர்’ வைத்த உதயநிதி ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

Election2024 : பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்தார்.

மக்காவை தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளன.  ஏற்கனவே கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளது, போட்டி திமுக அதிமுகவுக்கு தான், நான் கல்லை காட்டுகிறேன், அவர் பல்லை காட்டுகிறார் என அரசியல் பிரச்சார மேடைகள் பரபரப்பாகி வருகின்றன.

நேற்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என கூறியிருந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதனை  மேற்கோள்காட்டி, ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது உண்மை தான். உங்களை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவதில்லை என கூறிய உதயநிதி, இனி நாம் பிரதமர் மோடியை அனைவரும் மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.

நாம் (தமிழக மக்கள்) மத்திய அரசுக்கு 1 ரூபாய் வரி கொடுத்தால் , அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள் அதனால் பிரதமரை 29 பைசா என அழைக்க உள்ளோம் என திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago