#JustNow: கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனை – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனை சேவையை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடமாடும் மருத்துவமனை சேவைக்காக ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்களை முதலமைச்சர் சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர்.
மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நடமாடும் மருத்துவமனை செல்லும். தமிழகத்தில் உள்ள தொலைதூர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அளிக்க மருத்துவ வாகனங்கள் கொண்டு செல்லப்படும். தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்படும் எண்டுறம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025