யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது.!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
அதில் டாஸ்மாக் கடையும் அடங்கும்.டாஸ்மாக் கடை மூடியதால் பல இடங்களில் மறைமுகமாக மதுபானங்களை விற்பது ,  கள்ளசாராயம் தயாரித்து விற்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றார்.
இதையெடுத்து குக்கரில் சாராயம் காய்ச்சிய விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பத்தை சார்ந்த  4 இளைஞர்கள் கள்ளச்சாராயம் விற்று வருவதாக போலீசார் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்ற 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடன் இருந்து 220 லிட்டர் குக்கர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களை போலீசார் விசாரணை நடத்தியதில் சாராயம் எப்படி காய்ச்சுவது என யூடியூப்பில்  பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியதாக அவர்கள் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services