துபாய் :ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.
ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர். திருணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும், குழந்தை பிறந்து இரண்டே மாதங்களே ஆன நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து செய்வதாக பகீரங்கமாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இளவரசி தனது பதிவில், “தனது கணவர் திருமணத்திற்கு புறம்பான உறவுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, “அன்புள்ள கணவரே, நீங்கள் மற்ற தோழர்களுடன் ஆக்கிரமித்துள்ளதால், நான் எங்கள் விவாகரத்தை அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.”
unknown nodeதுபாய் இளவரசி தன்னை அவரது முன்னாள் மனைவி என்று குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய முறையில் கணவரை விவாகரத்து செய்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடராமல் இருப்பதையும், இளவரசி ஷேக் மனாவுடன் வைத்திருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்தும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
