ஆஷஸ் போட்டி : ஸ்டோக்ஸ் அதிரடி ..! திகில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

unknown node

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.அதில் வார்னர் 61 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதில் டென்லி மட்டும் 12 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாஸ்ல்வுட் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி112 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி 246 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் பறித்தனர்.

unknown node

இதனை தொடர்ந்து 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது கடினம் என பலர்  எண்ணினார்.

இந்நிலையில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ,ஜேசன் ராய் 8 ரன்னுடன் வெளியேறினர். அதன் பின்னர் ஜோ ரூட்  , ஜோ டென்லி இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஜோ ரூட் 77  , ஜோ டென்லி 50 ரன்களுடன் வெளியேற பின்னர் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு  9 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

unknown node

அப்போது பென்ஸ்டாக் மற்றும் ஜாக் லீச்  இருவர் மட்டுமே இருந்தன. லீட்சை மறுமுனையில் வைத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதியாக 125.4 ஓவரில் 362 ரன்கள் குவித்து.இங்கிலாந்து அணி மாபெரும் வெற்றி பெற்றது.

பென்ஸ்டாக் 135 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.  இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1 – 1  என சமநிலையில் இரு அணிகளும் உள்ளது.