அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ashutosh sharma

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது.

அப்போது பஞ்சாப் அணி 10-வது ஓவரில் 77/6 என்று போராடிக்கொண்டிருந்தபோது பஞ்சாப்  வீரர் அசுதோஷ் சர்மா மட்டும் நின்று கொண்டு ரன்களை அடித்துக்கொண்டு இருந்தார். இந்த போட்டியில் அசுதோஷ் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார். அப்படி இருந்தும் பஞ்சாப் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இந்த போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 13வது ஓவரை பும்ரா தான் வீசினார். அந்த ஓவரை அசுதோஷ் சர்மா தான் எதிர்கொண்டார். அப்போது பும்ரா ஒரு நோ பால் வீசினார். இதனால் ப்ரீ ஹிட் கிடைத்தது. அந்த ப்ரீ ஹிட்டை சரியாக பயன்படுத்திக்கொண்டு அசுதோஷ் சர்மா  ஸ்கொயர் லெக்கின் பின்னால் சிக்ஸர் அடித்தார்.

இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு பும்ரா பந்தை சிக்ஸர் அடிக்கவேண்டும் என்பது கனவு என அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த போட்டியில் நான் அருமையாக விளையாடினேன் என்று நினைக்கிறேன்.  இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவரை எதிர்கொண்ட போது ஸ்வீப் ஷாட் அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது கனவாக இருந்ததது. அந்த கனவு எப்படியோ எனக்கு நிறைவேறிவிட்டது. நான் இந்த ஷாட்களை பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். பும்ரா வீசிய பந்தும் சரியாக அமைந்தது உடனடியாக அந்த பந்தை மடக்கி ஸ்வீப் ஷாட் அடித்துவிட்டேன். விளையாடி கொண்டு இருந்த போது வெற்றிபெறுவோம் என நம்பினேன் ஆனால், அது நடக்கவில்லை” எனவும் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்