பும்ரா கிட்ட கலந்து பேசுங்க...முக்கிய அட்வைஸ் கொடுத்த சஞ்சய் பங்கர்!

லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பும்ரா சரியாக விளையாடாமல் 45 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

Hero Image

மும்பை : இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோசமான செயல்பாட்டால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.திங்கள்கிழமை வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பும்ரா 45 ரன்கள் விட்டுக்கொடுத்தும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் தோல்வியைச் சந்தித்தார்.

இந்தச் செயல்பாடு அவரது பணிச்சுமை மேலாண்மை மற்றும் அணியின் பயன்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மூத்த இந்திய மகளிர் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, பும்ராவின் உடல் மற்றும் மனநிலை குறித்து அணி நிர்வாகம் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ESPNcricinfo-வில் பேசிய வேதா, “அணி நிர்வாகம், பயிற்றுவிப்பாளர் அல்லது கேப்டன் சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), ரோஹித் ஷர்மா ஆகியோர் பும்ராவுடன் உட்கார்ந்து நேர்மையாகப் பேச வேண்டும். ‘நீ உள்ளுக்குள் 100% உணர்கிறாயா? ஒரு போட்டிக்கு ஓய்வு எடுக்க விரும்புகிறாயா?’ என்று கேட்க வேண்டும். அவர் புதிய உத்வேகத்துடன் திரும்ப வருவதற்கு இது உதவும்” என்றார்.

முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். MI அணி தங்கள் முன்னுரிமைகளைப் பொறுத்து கடினமான முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.“பும்ரா மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். முதல் இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுப்பது அவருக்கு வழக்கமல்ல. அவரது உடல் மொழியில் அவர் வலியை உணர்வதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இரண்டாவது ஓவரிலும், நான்காவது ஓவரிலும் அவரைப் பந்து வீச வைத்தது தவறு” என்றார் பங்கர்.

இருப்பினும், இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரயன் ரிக்கெல்டன் அபாரமான ஆட்டத்தால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.பும்ராவின் தற்போதைய நிலை குறித்து அணி நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.