துபாய் : வங்கதேச கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை 2025 தொடரில் செப்டம்பர் 16, 2025 அன்று அபுதாபியில் உள்ள ஷேக் ஸயீது ஸ்டேடியத்தில் அபுகானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, வங்கதேசத்துக்கு “வெற்றி இல்லையேல் வெளியேற்றம்” என்ற முக்கியமான நிலையில் உள்ளது. வங்கதேசத்தின் ஸ்பின் பயிற்சியாளரும், முன்னாள் பாகிஸ்தான் ஸ்பின்னருமான முஷ்தாக் அகமது, இந்தப் போட்டிக்கு முன் ESPNcricinfoவுக்கு பேசினார்.
வங்கதேச அணி, தொடரை ஹாங்காங்கை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி நல்ல தொடக்கத்துடன் ஆரம்பித்தது, ஆனால் இலங்கையிடம் 6 விக்கெட்டுகளில் தோல்வியடைந்தது. இப்போது, அபுகானிஸ்தானை வென்றால் மட்டுமே சூப்பர்-ஃபோர் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது, ஆனால் இலங்கை-அபுகானிஸ்தான் இடையேயான கடைசி குரூப் போட்டியின் முடிவையும் பொறுத்திருக்க வேண்டும். “நம்பிக்கை மிக முக்கியம். முதலில் இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்று கவனம் செலுத்த வேண்டும். மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்காமல், வெற்றியை நோக்கி முயற்சிக்க வேண்டும்,” என்று முஷ்தாக் கூறினார்.
மேலும், முஷ்தாக், வங்கதேச வீரர்களுக்கு மன உறுதியை வலியுறுத்தினார். “சில சமயங்களில் ஆரம்பத்தில் தோல்வி ஏற்படும்போது, 4-5 விக்கெட்டுகள் விரைவாக விழுந்துவிடும். அப்போது வீரர்கள் கடந்த தோல்விகளை மறந்து, வேகமாக முன்னேற வேண்டும். பயிற்சியாளர்களாக, நாங்கள் வீரர்கள் பயந்து ஒதுங்கிவிடாமல், அவர்களின் நம்பிக்கையை உயர்த்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
அதனைத்தொடர்ந்து, தனது அனுபவத்தைப் பகிர்ந்து, “நான் இம்ரான் கான், ஜாவித் மியான்தாத், வாசிம் அக்ரம் போன்ற பெரிய வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன். அவர்கள் எனக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் எனவும் உங்களுக்கு சர்வதேச அளவில் இடம் உண்டு என்று நம்பாவிட்டால், எதிரணியை அதிகமாக மதித்து, உங்கள் பலத்தை மறந்துவிடுவீர்கள்,” என்று கூறினார்.
வீரர்கள் தங்கள் திறமையை நம்பி, தைரியமாக விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இது பற்றி பேசிய அவர் “ஆக்ரஸிவாக விளையாடி தோல்வியடைந்தாலும், அது உங்களை வலிமையாக்கும். லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிரிடோய், தான்சிம் ஹசன், ஜாகர் அலி, ஷமிம் ஹொசைன் போன்ற வீரர்கள் கடினமான சூழலிலும் 170-180 ரன்கள் எடுக்கும் திறமை உள்ளவர்கள். எங்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களும் உள்ளனர். அணியாக நாங்கள் வலுவடைந்தால், எந்த அணியையும் வீழ்த்த முடியும்,” என்று அவர் கூறினார்.
இந்தப் போட்டியில், அபுகானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது போன்ற ஸ்பின்னர்களுக்கு எதிராக வங்கதேசத்தின் பேட்டிங் சவாலை எதிர்கொள்ள வேண்டும். முஷ்தாக், வீரர்கள் ஆக்ரஸிவாக விளையாடி, மிடில் ஓவர்களில் பேட்டிங் பலவீனத்தை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
