எனை நோக்கி பாயும் தோட்டா இத்தனை பிரச்சனைகளை கடந்து நாளை வெளியாகுமா?!

Default Image

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும்,  அதனை அடுத்து தான் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது என தகவல் வெளியானது. அதற்கடுத்ததாக இந்த படத்தின் விநியோகஸ்தர் ராஜராஜன் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் படங்களின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கடன் பாக்கி செலுத்தாமல் உள்ளார். என புது சிக்கல் எழுந்தது.

இதனை அடுத்து, மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம். ராஜராஜனுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையில் ஒரு நபரை நியமித்து பிரச்சனைகளை தீர்க்க வழி வகுத்துள்ளது.

அதற்குள் இன்னொரு பிரச்சனையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம், செங்கல்பட்டு ஏரியாவில் நஷ்டம் என கூறி செங்கல்பட்டு ஏரியா விநியோகிஸ்தர்கள் ENPT படத்தை  இன்னும் வாங்காமல் உள்ளனராம். அதற்கு நேற்று வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனால் தான் இன்னும் இப்படத்திற்கான பூக்கிங் பெரிய மால், தியேட்டர்களில் ஆரம்பமாகவில்லையாம்.  படம் நாளை வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi