ஈரானில் 21 வயதாகும் கிமியா அலிசாதே என்ற பெண் 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இரானிய பெண் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். இந்நிலையில், கிமியா அலிசாதே தனது அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களில் நானும் அதில் ஒருவர் என்றும், என்னோட வெற்றியை ஈரான் அரசு அதிகாரிகள் பிரச்சார கருவியாக மட்டுமே பயன்படுத்தியதாகவும், அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அலிசாதே தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் சமீப காலமாக நெதர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, கடந்த சனிக்கிழமையன்று, தாங்கள் “மனித தவறுதலாக” அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்தது. ஈரானிய அரசின் முன்னுக்குப்பின் முரணான பேச்சை எதிர்த்து அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிமியா அலிசாதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…