அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் விமானத்தை பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் வாங்கிய பாகிஸ்தான்.
முன்பு பாகிஸ்தானியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை விசா வழங்கிய அமெரிக்கா. தற்போது அதை 3 மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் விமானத்தை பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் வாங்கிய பாகிஸ்தான்.
இந்திய விமானப்படை மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக அமெரிக்காவிடம் இந்தியா புகார் அளித்தது.
அதற்கான ஆதாரத்தையும் அமெரிக்காவிடம் இந்தியா கொடுத்து உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பல வழிகளில் நெருக்கடி வருகின்றனர்.
மேலும் நெருக்கடியாக அமெரிக்கா விசா கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. முன்பு பாகிஸ்தானியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை விசா வழங்கிய அமெரிக்கா. தற்போது அதை 3 மாதமாக குறைத்து உள்ளது.
மேலும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கும் இனிமேல் 3 மாதங்கள் வரை மட்டுமே விசா வழங்கப்படும். என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல விசா பெறுவதற்கு கட்டணத்தை அமெரிக்கா 160 டாலரில் இருந்து 192 டாலராக உயர்த்தி உள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தூதரக அலுவலகத்தை விட்டு 40 கி.மீட்டர் துரத்தித்திற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் , அதற்கு முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும் , என அமெரிக்கா கட்டுப்பாடு கொண்டு வந்தது.