உங்கள் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கணும்னு ஆசைப்படுறீங்களா ? அப்ப உங்க குழந்தைகளுக்கு இதை கொடுத்து பாருங்க....!!!

குழந்தைகள் கடவுள் கொடுத்த வரம். இந்த குழந்தைகளுக்கு எதுவும் ஒன்று என்றால் நம்மால் தாங்கி கொள்ள இயலுவதில்லை. நம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன்

குழந்தைகள் கடவுள் கொடுத்த வரம். இந்த குழந்தைகளுக்கு எதுவும் ஒன்று என்றால் நம்மால் தாங்கி கொள்ள இயலுவதில்லை. நம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன் தான் நமது சந்தோசம் என கருதும் பெற்றோர்கள் அநேகர் உண்டு. இதனால் தனது குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்க பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. இப்போதும் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்க சில வழிமுறைகளை பற்றி காண்போம்.

unknown node

பச்சை பட்டாணி குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளனர்.

பச்சை பட்டாணியின் பயன்கள் :

எல்லா காய்கறிகளையும் விட ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி, பச்சை பட்டாணி ஆகும். மாமிச உணவுகளுக்கு மாற்றாக பச்சை பட்டாணியை சாப்பிட்டால் தேவையான அளவு சத்துக்கள் கிடைக்கும். பச்சை பட்டாணியில்மாவுசத்து, புரதம், கொழுப்பு, நார்சத்து, தயாமின், நியாஸின், ரிபோபிலாவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சிபோன்ற சத்துக்கள் உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சி :

unknown node

வளரும் குழந்தைகள் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைபட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்தி கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்கிறது.

உடல் மெலிவு :

உடல் மெலிவாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும், உடல் வலிமையுடனும் வளர பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பச்சை பட்டாணி உடல் எடையை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மனநலம் :

unknown node

பச்சை பட்டாணியில் பாஸ்பரஸ் உள்ளது. இதனால் மனநலம் பாதிக்கபட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணியை சாப்பிட்டு வந்தால், விரைவில் பூரண குணமடைவார்கள்.