சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள “மெய்யழகன்” படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 27 அன்று வெளிவரவிருக்கும் நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில், மாப்ள – மச்சான் கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே மிக நெருக்கமான பிணைப்பை டிரெய்லர் காட்டுகிறது. இரண்டு தூரத்து உறவினர்கள் திடீரென மீட் செய்யும்பொழுது, அந்த இரண்டு பேரும் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு இன்னும் அதிகமாக […]
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட நினைக்கும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னதாகவே, தங்களுடைய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். அப்படி தான், அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் படமாக அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக […]
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள திரையுலகில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் கமல் நடித்த ‘சத்யா’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மா, எர்ணாகுளம் லிசி மருத்துவமனையில் நேற்று மாலை 5:30 மணியளவில் காலமானார். இன்று காலை 9 […]
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங் செய்யும் விஷயத்தில், ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியிருந்தார். நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையைச் செய்யவிடாமல் பிரியங்கா தடுத்ததாகவும், தொகுப்பாளராக அவருடைய, ஆதிக்கத்தைச் செலுத்தியதாகவும், குற்றச்சாட்டை முன் வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார். இதன் காரணமாக மணிமேகலைக்கு ஆதரவு அதிகமாகக் குவிந்து பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் மீது […]
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சரிபோதா சனிவாரம்” திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சரிபோதா சனிவாரம் ஒரு அதிரடித் தெலுங்கு திரைப்படமாகும். இது தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த படத்தில் நானி தவிர, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, முரளி சர்மா மற்றும் சாய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் […]
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அந்த படத்தில் தன்னுடைய நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருப்பார். கமல்ஹாசனுடைய தீவிர ரசிகை என பல இடங்களில் அபிராமி கூறியிருக்கிறார். அப்படி கமல்ஹாசனுடைய தீவிர ரசிகையாக இருந்த இவர் இப்போது ரஜினியுடைய ரசிகையாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே, அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அதில் முக்கிய விஷயமாக படத்தின் இயக்குநர் T. J. ஞானவேல் பற்றி பாராட்டி பேசியிருந்தார். அதனைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ” தன்னுடைய மகள் சௌந்தர்யாவிடம் இயக்குனர் T. J. ஞானவேல் ஒன் லைன் ஒன்றை சொன்னார். நான் இயக்குனரிடம் சொன்னனேன் நமக்கு மெசேஜ் […]
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி […]
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மற்றுமொரு பாடகியான சுசித்ரா போட்டுடைத்த ஷாம்பு விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ; முத்துவும் மீனாவும் பூ கொடுக்க போறாங்க.. போற வழியில ரெண்டு பேரும் அந்த செருப்பு தைக்கிற தாத்தா பாட்டியை பார்க்க போறாங்க.. என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. இவர் தான் தாத்தா என்னோட வீட்டுக்காரர் அப்படின்னு சொல்லவும் ஏன் அன்னைக்கே சொல்லல.. அதுக்கு மீனா சொல்றாங்க நீங்க பாராட்டுன சந்தோஷத்துல […]
சென்னை : ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான “மனசிலாயோ” பாடலுக்கு நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து vibe செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குநருடன் நடிகைகள் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் மேடையில் ஆடிய நடனம் அங்கு இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய ரஜினி […]
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ரஜினி, மஞ்சு வாரியர், ராணா, ரக்ஷன், அனிரூத், அபிராமி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். மேடையில் பேசிய ரஜினி, ” இயக்குநர் ஞானவேல் என்னிடம் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடித்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குநர் ஞானவேல் என்னிடம் […]
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மறைந்த முன்னால் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற “மஞ்சள் பூசும், மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி..” பாடலும் தற்போது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது நாவுகளும் இந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம். அந்த அளவுக்கு பெரிய பிரச்சினையாக மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் சின்னத்திரையே புரட்டி போட்டுள்ளது. நிகழ்ச்சியில், தொகுப்பாளராக கலந்துகொண்ட தன்னை தன்னுடைய வேலையை பார்க்கவிடாமல் பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக குற்றம்சாட்டி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியிருந்தார். அத்துடன் தனக்கு காசு, பணத்தை விட சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியிருந்தார். […]
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை செய்து வந்த சுபாஷ் என்பவர், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், 2 மொபைல் போன்களை திருடிச் சென்றதாகசென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. பதிலுக்கு சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். […]
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு தொடங்கியது. அந்த விழாவில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் டீசர் அதாவது ப்ரவ்யூ ரிலீசாகி இருக்கிறது. அந்த டீசரில், ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக […]
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், வெளியான 13 நாட்களில் படத்தினுடைய பட்ஜெட்டை மொத்தமாக வசூல் […]
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து ட்ரோல்களை சந்தித்தது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வசூல் செய்யாமல் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியை தொடர்ந்து அடுத்தாக கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே, ஒரு நடிகருடைய படம் சரியாக போகவில்லை என்றால் அவருடைய அடுத்த படங்களுக்கான விற்பனை வியாபாரத்தில் முந்திய படத்தை விட குறைவான […]
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான கிரிக்கெட் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இயக்குநர் தமிழரசன் […]