”நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்” கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!
மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, ராஜேஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக, 2-ம் தேதி இறுதிசடங்கு நடக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமாபுரத்தில் உள்ள ராஜேஷ் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் மோகன், சரவணன், தியாகராஜன், விஷால், சின்னிஜெயந்த், கவிஞர் வைரமுத்து, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
அந்த வகையில், மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, ரஜினிகாந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராஜேஷ் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தியதே சான்று. நல்ல மனிதர், திடீரென அவர் இல்லையென்பது வருத்தமாக உள்ளது. ராஜேஷின் மறைவு, பேரிழப்பு . அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” என்றார்.