பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு பிறந்தநாள் !

Default Image

இந்து சமய கடவுளில் முதற்முதல் கடவுளாக இருப்பவர் விநாயர். அவரை வணங்கி விட்டு தான் நாம் எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம்.அப்படி செய்தால் நாம் எண்ணியது எண்ணியவாறு மிகவும் சிறப்பாக நடக்கும்.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட பட்டு வருகிறது.அன்றைய நாளில் மண்,மரம் ,கல்,செம்பு முதலியவற்றால் பிள்ளையாரை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகிறது.

இந்நிலையில் வீடுகளில் களிமண்ணால் பிள்ளையாரை வைத்து அருகம்புல் மற்றும் எருக்கம் மாலை அணிவித்து பிள்ளையாரை வழிபடலாம்.பின்பு அவருக்கு பிடித்த கொண்டகடலை ,மோதகம் ,கொழுக்கட்டை ,பொங்கல்,கரும்பு அவல் பொரி ,பூ ,பழங்கள் முதலியவற்றை படைத்து பிள்ளையாரை வழிபடலாம்.

அன்றைய நாளில் விநாயகர் அகவல், விநாயகர் கவசம் ,காரிய சித்தி மாலை முதலிய வற்றை பாடி பிள்ளையாரை வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் நம்முடைய வாழ்வில் பல நன்மைகளும் நடக்கும்.வாழ்க்கை வளம் பெறும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்