சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது தடுப்புச் சுவரில் மோதித் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆவடி இஎஸ்ஐ அண்ணாநகரைச் சேர்ந்த பால் என்பவர் ஆவடி பேருந்து பணிமனை எதிரே சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட சாலை விபத்துக்களில் 177பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 84பேர் ராயப்பேட்டை, சென்ட்ரல், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கடுமையாகக் காயமடைந்த 93பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்….source:www.dinasuvadu.com
புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நள்ளிரவில் இருவர் உயிரிழப்பு; 177பேர் காயம்......
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர