இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் பெண் யூடியூபர் ஒருவரும்   அடங்குவார். கைது செய்யப்பட்ட இந்த அனைவரும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், எதிரிக்கு தகவல்களை வழங்கியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களில் கைதாலில் ஒருவர், பானிபட்டில் ஒருவர், நுஹ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டனர், ஹிசாரில் இருந்து ஒரு பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது […]

#Arrest 4 Min Read
spy youtuber pakistan

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின் எல்லைகளுக்கு இடையே கொஞ்சம் குறைந்துள்ளது என்று சொல்லலாம். இருப்பினும், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பதட்டம் முழுவதுமாக குறையவில்லை என்று சொல்லலாம். போர் நிறுத்தம் செய்யப்பட்டவுடன் ஏப்.23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா […]

#Pakistan 5 Min Read
PoonamKumarShah

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவவுள்ளது. இந்த ஏவுகணை வாகனம் பூமியின் பெரும்பாலான மேற்பரப்பை ஆராய்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், ”வரவிருக்கும் PSLV-C61 ஏவுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பூமியில் உள்ள பல்வேறு […]

#ISRO 6 Min Read
EOS09 - ISRO

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகள் மூன்று பேர்பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டிடத்தில் அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தஞ்சம் புகுந்ததை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன. இது கடந்த […]

#Kashmir 4 Min Read
Drone Captures terrorists

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் ‘சிக்ஷா நியாய் சம்வாத்’ என்ற திட்டத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்து, கட்சியின் மாநில அளவிலான பொதுக்கூட்ட நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து, காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்தே சென்று சந்தித்தார். பின்னர், நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக […]

#Bihar 4 Min Read
Rahul Gandhi in car

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் பகுதிக்கு சென்று விமானப்படை தளத்தில் பார்வையிட்டு வீரர்களுக்கு மத்தியில் சில விஷயங்களை பேசினார். அதில் பேசிய அவர் ” ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தது. இந்த நடவடிக்கை நம்மளை பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் எனவும் நிரூபித்துள்ளது. எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது.  […]

#Pakistan 7 Min Read
rajnath singh about Terrorist Attack

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய் ஷா, நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார். இதையடுத்து, கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டார். இதனை […]

#Supreme Court 4 Min Read
BJP Ministe KunwarVijayShah

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது. இது கடந்த மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த இரண்டாவது என்கவுன்டர் ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை (13ம் தேதி) ஷோபியன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் இந்தியப் படைகள் மூன்று லஷ்கர்-இ-தொய்பாவை வீழ்த்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த […]

#Pulwama 4 Min Read
Encounter Pulwama

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் கொல்லப்பட்ட ஆயுத கும்பலைச் சேர்ந்த நபர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சந்தேல் மாவட்டத்தில் நேற்றிரவு (மே 14 அன்று) ஆயுதமேந்திய குழுவினர் நடமாட்டம் குறித்து உளவுத்துறை தகவல் […]

#Manipur 3 Min Read
10 militants killed in Manipur

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை தெரிவித்ததற்காக அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இன்றைய தினம் தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது. அன்படி, இந்த வழக்கில் கடுமையான […]

#BJP 4 Min Read
FIR against BJP minister

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ”பார்கவஸ்த்ரா” ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த ‘பார்கவஸ்த்ரா’ ராக்கெட் வானில் பறந்த டிரோனை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. மே 13 அன்று மூத்த ராணுவ வான் பாதுகாப்பு (AAD) அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனைகளில், மூன்று சோதனைகளில் ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகளுமே வானில் பறந்த டிரோன்களை அழித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்கவஸ்த்ரா 2.5 கி.மீ தூரம் வரை சிறிய ட்ரோன்களைக் கண்டறிந்து […]

#Odisha 3 Min Read
Bhargavastra

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி ஊடகமான TRT Word-ன் X தள கணக்கையும் மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், குளோபல் டைம்ஸ் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் வரும் ஒரு ஆங்கில டேப்ளாய்டு செய்தித்தாள் ஆகும், அதே […]

#China 3 Min Read
china - truky x account

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகளை சந்தித்த பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார். அமைச்சர் விஜய் ஷா நேற்றைய தினம், இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய அவர், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததில் பிரதமர் மோடியின் தலைமையை அவர் பாராட்டினார். பின்னர், நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் […]

#BJP 2 Min Read
BJP Minister - Sofiya Qureshi

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பதிலாக நீதிபதி கவாய் நியமிக்கப்பட்டார். முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் தேதி, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி கவாய் நியமனம் தொடர்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. ஏப்ரல் 16 அன்று, தலைமை நீதிபதி கன்னா அவரது பெயரை […]

#Supreme Court 4 Min Read
BR Gavai

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான செய்தியாக இருந்து வருகிறது. இந்த சூழலில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  அதில் பேசிய அவர் ” சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, ​அவர்களுக்கு அந்த சத்தம் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்றுதான் கேட்கும். பாரத் மாதா கீ […]

#Pakistan 5 Min Read
pm modi about AirStrike

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.  போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், நேற்று மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் […]

#Pakistan 4 Min Read
donald trump pm modi

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்யப்பட்டது.. இருப்பினும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறினால் பதிலடி வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்து வருகிறது. இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்தவுடன் முதல் அறிவிப்பாக ட்ரம்ப் தான் வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து வர்த்தக தொடர்புகளை நிறுத்தி விடுவேன் […]

#Pakistan 6 Min Read
jairam ramesh pm modi

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம், காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாத நடவடிக்கைகள், மற்றும் எல்லை மீறல்கள் ஆகியவற்றால் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ (லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு) பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர். […]

#Pakistan 7 Min Read
J&K Red

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் அந்தப் பகுதிகளில் பதுங்கு குழிகள் கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அது மட்டுமின்றி, பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இன்னும் அங்கு வசிக்கும் பலரும் வீட்டை விட்டு பயத்தில் வெளியே கூட வராமல் இருக்கிறார்கள். அப்படி அச்சப்பட்டு வீட்டிற்குள்ளே இருக்கும் மக்களுக்கு அறிவுரை வழங்கும் […]

#OmarAbdullah 6 Min Read
Omar Abdullah

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை அதிகாரிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு இரு நாடுகளின் எல்லைகளிலும் நிலைமை எப்படி இருக்கிறது? போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன? வீரர்களுக்கு என்ன வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன? இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அப்பொழுது, […]

AN Pramod 4 Min Read
AN Pramod -Operation sindoor