இந்தியா

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இது செப்டம்பர் 17 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முழுமையாக விலகும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 […]

#Kerala 4 Min Read
southwest monsoon kerla

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் ஆகியவற்றை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் நிதி ஆயோக் பணியாற்றும். துறைகளுக்கு இடையேயான பிரச்சனை, மாநிலங்களுக்கு தேவைப்படும் நிதி, சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க நிதி ஆயோக் வழிவகுக்கிறது. மாநிலங்களை வலுப்படுத்தி நாட்டை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு […]

#Delhi 4 Min Read
Delhi - CM MK Stalin

மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ..! ‘பாக்’ வார்த்தையை நீக்கிய கடை.!

ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக்,  இனிப்புகளின் பெயர்களை மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் உள்ள பிரபலமான இனிப்புக் கடையான தியோஹர் ஸ்வீட்ஸ், முன்பு “பாக்” என்ற பெயரை கொண்டிருந்த அதன் இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளது. உதாரணமாக, மைசூர் பாக் இப்போது இந்த கடையில் மைசூர் ஸ்ரீ என்று அழைக்கப்படும். மேலும், மோதி பாக், ஆம் பாக் மற்றும் […]

Jaipur Shop 3 Min Read
Mysore Pak - Mysore Shree

வானத்தில் குலுங்கிய விமானம்.. அனுமதி கேட்ட இந்தியா.. அனுமதி மறுத்த பாகிஸ்தான்! – திடுக்கிடும் தகவல்

டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதமடைந்தது. திடீரென எதிர்ப்பட்ட ஆலங்கட்டி புயலால் நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசரக் கால அனுமதிக்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அணுகியபோது, லாகூர் வான் போக்குவரத்து மையம் அனுமதி மறுக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக விமானிகள் கடும் போராட்டத்துக்கு பிறகு, 220 பயணிகளுக்கு பாதிப்பின்றி […]

#Pakistan 3 Min Read
IndiGo - Srinagar

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை […]

#Pakistan 6 Min Read
s jaishankar donald trump

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய அவர் ” பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம். என்னுடைய எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும் ஆனால், தற்போது என் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது” […]

#BJP 6 Min Read
Rahul Gandhi narendra modi

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களின் கைது எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. தற்பொழுது, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் வாரணாசியைச் சேர்ந்த ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இந்தியாவின் […]

#Pakistan 4 Min Read
Maqsood Alam from Varanasi,

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டன. இதனை பிரதமர் மோடிராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை […]

#BJP 4 Min Read
pm modi

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்த 103 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், சுத்தமான குடிநீர் வசதிகள், நவீன கழிப்பறைகள் மற்றும் லிஃப்ட்/எஸ்கலேட்டர் வசதிகள்.இலவச வை-ஃபை, உணவு விடுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு […]

#OpeningCeremony 4 Min Read
narendra modi PM

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்திற்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் 2025 மே 21 அன்று சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான அபுஜ்மத் வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த நடவடிக்கை “ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-பிஜாப்பூர் எல்லையில் உள்ள […]

basavaraju 6 Min Read
basavaraju

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து, அவரது 151 வெளிநாட்டுப் பயணங்கள் (72 நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு 10 முறை) மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்காதது என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தொடர்ந்து வெளிநாட்டுப் […]

#BJP 5 Min Read
Mallikarjun Kharge

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிகைலாஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் யாத்திரை செல்லும் பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் கொட்டிக்கிடக்கும் மணல் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. நிலைமையை சாலைகள் அமைப்பின் (BRO) குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதி கைலாஷ் யாத்திரை […]

kailash 3 Min Read
Landslide on Adi Kailash Yatra

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கூறியதாகவும் தகவல்கள் பரவியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக […]

#Pakistan 4 Min Read
donald trump Vikram Misri

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால் அந்த சமயம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அதைப்போல, நேற்று கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் […]

#Corona 5 Min Read
corona

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில் ஒன்றான JN.1 தான் இதற்கு காரணமாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சமாளித்து விடுவதால், வேகமாக பரவுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. […]

#Corona 2 Min Read
corona india

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கினார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்திர ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து […]

India Pakistan Tensions 4 Min Read
Vikram Misri

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என கர்னல் குரேஷி குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா சர்ச்சைகுரிய வகையில் பேசிருந்தார். இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்ததோடு விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். தற்பொழுது, ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியை விமர்சித்த விவகாரத்தில் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. […]

#Supreme Court 4 Min Read
Colonel Sophia Qureshi - Vijay Shah

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், நான்கு குடும்பங்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் இருந்து பதினாறு […]

#Death 4 Min Read
Hyderabad Charminar

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தனது 101-வது விண்வெளி பயணமாக பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 5:59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-09, சூரிய ஒத்திசைவு துருவ புவி […]

#ISRO 3 Min Read
ISRO -PSLV

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat- 1B) எனும் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி-சி61 (PSLV-C61) ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இன்று அதிகாலை 5.59 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஆகும், இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு பிரியும் பொழுது எந்தவித கோளாறும் இல்லாமல் சென்ற நிலையில், ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் […]

#ISRO 3 Min Read
PSLVC61