இந்தியா

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே மூன்று மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய சிறுவன் ஷங்குவின் வீடியோ தான். வைரலாக பரவிய அந்த வீடியோவில், ஷங்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தான். இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்று, கேரள அரசின் […]

#Kerala 5 Min Read
Kerala Anganwadi

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், அவரின் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் நேற்றைய தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ”கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார […]

Kamal Haasan 4 Min Read
kamal haasan - Karnataka High Court

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​”கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதைத் தொடர்ந்து, அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கியது. இவரது இந்த சர்ச்சை கருத்து கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளால் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக, முதலமைச்சர் சித்தராமையாவும் கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இதையடுத்து, கடந்த வார வெள்ளிக்கிழமை, கர்நாடக […]

#Karnataka 4 Min Read
Kamal Haasan - DK Shivakumar

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் படுகொலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இந்த வாரம் நடைபெறும் முதல் கூட்டமாகும். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று […]

Operation Sindoor 3 Min Read
Prime Minister Modi

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில் தேர்வை நடத்துவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே கட்டமாக ஆன்லைனில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவை என்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு, தேர்வில் பங்கேற்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான தேர்வு மையங்கள் அடையாளம் […]

#NEET 3 Min Read
neet pg

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங் பகுதிகளில் சுமார் 1500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்இந்தச் சூழலில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, லாச்சன் நதி அருகே மீட்புப் பணிக்காக ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். அப்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்,  3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 6 பேர் மாயமாகியுள்ளனர். […]

Army Jawans 3 Min Read
Sikkim LANDSLIDE

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. அப்படி இருந்தும் கூட இன்னும் பரபரப்பு குறையவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு […]

Anil Chauhan 5 Min Read
Anil Chauhan

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் :  இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த இடங்கள் பாகிஸ்தான் ராணுவம் கூட எதிர்பார்க்காத பகுதிகள் என்று கூட சொல்லலாம்.  இந்திய வீரர்கள் துணிச்சலாகச் சென்று, துல்லியமாகத் தாக்கி, பயங்கரவாதிகளை ஒழித்தனர். இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் பயிற்சியையும், வலிமையையும் உலகிற்கு காட்டியது மட்டுமின்றி நமது நாடு பாதுகாப்பில் உறுதியாக இருப்பதை […]

India-Pakistan war 4 Min Read
OperationSindoor

கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். தற்பொழுது, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து NDRF விரைந்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பான […]

#Kerala 4 Min Read
kerala heavy rain

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி, தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். தனிநபர்கள் 1 கிலோ வரை மட்டுமே அடகு வைக்க முடியும். தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும். நீங்கள் வழங்கும் நகை 22 காரட் (அ) அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த புதிய […]

#RBI 6 Min Read
Reserve Bank

அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன் – பவன் கல்யாண் பேச்சு!

சென்னை : ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், “அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன்” என்று பேசியிருக்கிறார். சென்னையில் 2025 மே 26 அன்று பாஜக சார்பில் நடைபெற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் “தமிழகம் சித்தர்களின் புனித பூமியாகவும், முருகனின் தெய்வீக பூமியாகவும் விளங்குகிறது. இது வீரமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பெயர் பெற்ற மண்ணாகும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து […]

#BJP 5 Min Read
Pawan Kalyan

ரயில் இஞ்சின் தொழிற்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.!

குஜராத் : 2 நாள் அரசு முறைப் பயணமாக குஜராத்தின் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார். ஆபரேசன் சிந்தூரின் வெற்றியைத் தொடர்ந்து முதல்முறையாக குஜராத் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளில் குஜராத்தின் தாஹோத்தில் கட்டமைக்கபட்ட ரயில் எஞ்சின்கள் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், தாஹோடிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், நாட்டின் முதலாவது 9000 எச்.பி.(HP) திறன் […]

#BJP 4 Min Read
PM Modi In Gujarat

கேரள கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்.., கரை ஒதுங்கிய கண்டெயினர்கள்.!

திருவனந்தபுரம் : கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் நேற்று முன்தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் ப பணிகள் தீவிரமடைந்துள்ளது. சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான […]

cargo ship 4 Min Read
Container Ship

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!

கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளப்பெருக்கு, பயண இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக மாநிலம் முழுவதும் […]

#Kerala 3 Min Read
Red alert in Kerala

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.!

டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு கொங்கன் கடற்கரையை கடந்தது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து. தற்பொழுது, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இதன் காரணமாக, மே 28 முதல் மே 30 வரை மத்திய மற்றும் வடக்கு வங்காள […]

#Rain 4 Min Read
Bay of Bengal Weather Update

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய முதல்வர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, ஆளுமை மேம்பாடு, மற்றும் […]

#BJP 4 Min Read
narendra modi bjp

மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றா செயல்படனும்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இது 10-வது ஆண்டு நிதி ஆயோக் கூட்டம். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சில முக்கிய விஷயங்களை பற்றியும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு குழுவாக […]

#BJP 5 Min Read
narendra modi

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்யும் வேலையில், BSF வீரர்கள் அவரை எச்சரித்தும் முன்னேறியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களுக்கும் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் […]

Banaskantha 4 Min Read
BSF Women -Pak Border

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இது செப்டம்பர் 17 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முழுமையாக விலகும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 […]

#Kerala 4 Min Read
southwest monsoon kerla

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் ஆகியவற்றை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் நிதி ஆயோக் பணியாற்றும். துறைகளுக்கு இடையேயான பிரச்சனை, மாநிலங்களுக்கு தேவைப்படும் நிதி, சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க நிதி ஆயோக் வழிவகுக்கிறது. மாநிலங்களை வலுப்படுத்தி நாட்டை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு […]

#Delhi 4 Min Read
Delhi - CM MK Stalin