ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தின் ராம்பாக் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, காலை 7.45 மணியளவில், பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சண்டை நடந்து வந்த நிலையில், தற்போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
,
unknown node