முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு.., கேரளாவில் இன்று பொது விடுமுறை.!

முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவவை யொட்டி கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

RIP Achuthanandan

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 101.

கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இப்படியான சூழலில், இன்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், அவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் CPI தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள பழைய AKG மையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று தர்பார் மண்டபத்தில் வைக்கப்பட்டது.

அவரது இறுதிச் சடங்கு நாளை (ஜூலை 23) ஆலப்புழாவில் உள்ள வலியச்சுடுகாடு மயானத்தில் மாநில மரியாதையுடன் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவரது மறைவை தொடர்ந்து, இன்றைய தினம்  (ஜூலை 22, 2025) பொது விடுமுறை அறிவித்துள்ளது கேரள மாநில அரசு. இதனால், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

மேலும், அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மாநிலத்தில் மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ துக்கம் அறிவிக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்