கஜா புயல் நிவாரணப் பொருட்கள்...!விமானத்தில் கொண்டு செல்ல கட்டணம் கிடையாது ...! மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அதிரடி அறிவிப்பு

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப சரக்கு கட்டணம் இல்லை என்று  மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப சரக்கு கட்டணம் இல்லை என்று  மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

unknown node

புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பினார்.

unknown node

முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர்  10 ஆம் தேதி வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்து  ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை எடுத்து செல்ல ஏர் இந்தியா விமானத்தில் சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.