கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்ததைத் தொடர்ந்து பெங்களூரில் ஊரடங்கு மீண்டும் கிடயாது என்று மாநில அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் பெங்களூரு நகர அமைச்சர்கள் ஆகியோருடன் நடந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா ஊரடங்கு அமல் செய்ய போவதில்லை என்று கூறினார். இருந்தாலும் கோகொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
ஆனால் நகரத்தில் கட்டாய சமூக விலகல் குறித்து கடைசி தொடர்பு எடுக்க கண்காணிப்பு கொள்கையை அறிவித்தது. கூட்டத்தைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூரில் ஊரடங்கு இருக்காது. இது தெளிவாக உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 445 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005ஆக அதிகரித்துள்ளது. மேலும் 246 பேர்நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6916ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
unknown node