மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்... ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

ombirla and NarendraModi

டெல்லி :2026ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டத்தொடரில் அமெரிக்கா–இந்திய வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.

இதனால் கடந்த சில தினங்களாக மக்களவை முழுமையாக முடங்கிய நிலை நீடித்து வந்தது.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற அவையில் பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர் இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் தான் நேற்று (பிப்.4) பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.சபாநாயகர் ஓம் பிர்லா மேலும் கூறுகையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டிருந்ததால், அவரை அவைக்கு வர வேண்டாம் என்று நான் கூறினேன்” என்றார்.

பிரதமர் வந்தால் அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கினார். இந்த குற்றச்சாட்டு அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இந்த கருத்து ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்று காங்கிரஸ் தரப்பு கடுமையாக விமர்சித்தது.

அவை மீண்டும் கூடிய உடனேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அந்த ஒத்திவைப்பு நோட்டீஸ்களை நிராகரித்துவிட்டு அவையை நடத்தினார். இதனால் அவையில் மீண்டும் அமளி நிலவியது. எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் செயலை ஜனநாயக விரோதம் என்று குற்றம்சாட்டின.

பிரதமர் மோடி அவைக்கு வராதது மற்றும் சபாநாயகரின் குற்றச்சாட்டு ஆகியவை நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.ஒட்டுமொத்தமாக, இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அவைக்கு வராதது, சபாநாயகரின் பரபரப்பு குற்றச்சாட்டு, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் ஆகியவை கூட்டத்தொடரின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளன. வரும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.