பிரதமர் நரேந்திர மோடியும்,அணில் அம்பானியும் இணைந்து ரூ.1.30 லட்சம் கோடியை சுருட்டிக்கொண்டனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
unknown nodeஇந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஊழல் நடந்திருப்பதாகவும் அக்கட்சி கூறி வருகிறது. ஆனால் இந்த ஊழல் புகாரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியும்,அணில் அம்பானியும் இணைந்து ரூ.1.30 லட்சம் கோடியை சுருட்டிக்கொண்டனர்.
ரஃபேல் விமான விவகாரத்தில் அனில் அம்பானியுடன் சேர்ந்து மோடி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தியுள்ளார் .அதேபோல் ராணுவ வீரர்களின் தியாக ரத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
unknown node