திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் மேலும் 2 அதிமுகவினரை கைது செய்த போலீசார்.
சென்னை தண்டியார்பேட்டையில் திமுக தொண்டர் நரேஷை தாக்கிய வழக்கில் மேலும் இரண்டு அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசென்னை அம்மா பேரவை இணை செயலர்கள் பரமேஸ்வரன், டில்லி ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில், திமுகவை சேர்ந்த கொளஞ்சியப்பன், ஸ்ரீதர், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளன்று திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் முன் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பபுழல் சிறையில் உள்ளார் என்பதுகிபிடத்தக்கது.
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…
கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…